Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

செங்கல்பட்டில் ரவுடி கொலை

செங்கல்பட்டில் பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு அன்னை அஞ்சுகம் நகர் விமல் (எ)குள்ள விமல்(38) மீது செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த விமலை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு நகர போலீஸார், விமலின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x