Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
இயற்கை மருத்துவ தினத்தையொட்டி நேற்று கிண்டி கரோனா மருத்துவமனையில், அதன் இயக்குநர் நாராயணசாமி தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மருத்துவர் கதிரேசன் இயற்கை மருத்துவம் குறித்து பேசினார். நோயாளிகளுக்கு இயற்கை உணவு வழங்கப்பட்டது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டீன் ஜெயந்தி பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‘இயற்கை மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல்’ என்பதை வலியுறுத்தும் இயற்கை மருத்துவ முறை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டது.
அரும்பாக்கம் அரசு இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இத்துறையின் இயக்குநர் கணேஷ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதேபோல், தமிழகம் முழுவதும் 175 இடங்களில் இயற்கை மருத்துவத்தின் யோகா, மசாஜ், நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், சூரிய குளியல், இயற்கை உணவு சிகிச்சை, நறுமண சிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT