Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
சிவகங்கை மாவட்டம், எஸ். புதுார் ஒன்றிய அலுவலகத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது அலுவலகத்தைச் சுற்றி வளர்ந்திருந்த செடிகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து அலுவலகத்தைச் சுற்றியுள்ள செடிகளை அகற்றும் பணி நடந்து வந்தது.
நேற்று அலுவலகத்தையொட்டி புதருக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT