Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

நவ.27-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் நவ.27-ம் தேதி காணொலி்க் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெறவுள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நவ.27-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் பி.மதுசூதன் தலைமை வகிக்கிறார். அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத் துக்குச் சென்று காணொலிக் காட்சி மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x