Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

‘அமித் ஷா பேச்சை அதிமுக கேட்டால் இருக்கும் வாக்குகளையும் இழக்கும்’

திருச்சியில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி யிருப்பது வரவேற்கத்தக்கது. சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுகவுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு எந்த பயமுமில்லை. அமித் ஷாவின் பேச்சைக் கேட்டால் தற்போது அதிமுக வுக்கு இருக்கும் கொஞ்சம் வாக்கு களையும் இழக்க நேரிடும் என்றார்.

முன்னதாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி ஜங்ஷன் மேம்பால பணிகளை விரைவில் முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்டுப்பெற கட்சித் தலைமை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x