Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
குன்னூர்: குன்னூரில் பெய்த கன மழையால் நகராட்சி மூலமாக சிமென்ட் கற்களால் சீரமைக்கப்பட்ட சாலை ஒரு வாரத்திலேயே பழுதடைந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் குன்னூர் மலைப்பாதையில் மரங்கள் விழுந்தன, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், குன்னூர் நகராட்சி சார்பில் மவுன்ட் பிளசன்ட் பகுதியில் சிமென்ட் கற்களால் சீரமைக்கப்பட்ட சாலை, ஒரு வாரத்திலேயே பழுதடைந்துள்ளது. இந்த சாலையை ஓட்டுபட்டரை, மோர்ஸ்கார்டன், பிருந்தாவன் பள்ளி, மவுன்ட்பிளசன்ட் போன்ற கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலை பழுதானதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மழையால் சேதமடைந்த குன்னூர் மவுன்ட் பிளசன்ட் சாலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT