Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
குவைத்தில் வேலையின்றி 9 மாதங்களாக தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறியது:
குவைத் நாட்டில் ராமநாதபுரம் 8, திருவாரூர் 6, சிவகங்கை மற்றும் தூத்துக்குடி தலா 3, திருநெல்வேலி 4, திருச்சி மற்றும் தஞ்சாவூர் தலா 2, கள்ளக்குறிச்சி, தென்காசி, மதுரை, கடலூர் தலா ஒருவர் என மொத்தம் 32 பேர் வேலையிழந்து, வருமானமின்றி கடந்த 9 மாதங்களாக தவித்து வந்தனர்.இதுகுறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் இந்திய தூதரகத்தின் உதவியோடு குவைத்திலிருந்து விமானம் மூலம் 32 பேரும் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்களை திருச்சி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் வரவேற்று, உணவு மற்றும் குடிநீர் வழங்கி பாதுகாப்பாக அரசு செலவில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT