Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

சிங்கம்புணரி அருகே விபத்தில் இளைஞர் மரணம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டியைச் சேர்ந்த 8 பேர் நேற்று தெக்கூரில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மினி வேனில் ஊருக்கு திரும்பினர்.

முறையூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பனை மரத்தின் மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த ஆறுமுகம் மகன் ஆனந்த் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x