Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

பெண் குழந்தைக்கான மாநில விருதுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைச் சிறப்பிக்கும் விதமாக, அதற்கான மாநில விருது 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

இந்த விருது தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ம் தேதி வழங்கப்படும். விருதுடன், பாராட்டுப் பத்திரம், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். இவ்விருது பெற விரும்பும் 18 வயதுக்கு உட்பட்ட வீரதீரச் செயல் புரிந்த பெண் குழந்தைகள் நவ.25-ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x