Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முதியவர் முயற்சி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

ராஜாக்கமங்கலத்தை அடுத்துள்ள ஆலங்கோட்டைபுதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(65). இவர் அறக்கட்டளை ஒன்றின் தலைவராக இருந்து வந்தார். அறக்கட்டளையின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தனக்கு தொல்லை கொடுப்பதாக, வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த பாலகிருஷ்ணன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றார். அங்கு பணி யில் இருந்த நேசமணிநகர் காவல் நிலைய பயிற்சி எஸ்.ஐ. அருணாச்சலம், சிறப்பு எஸ்.ஐ. முருகன், தனிப்பிரிவு ஏட்டு கிருஷ்ணகுமார் மற்றும் போலீஸார் அவரை தடுத்து காப்பாற்றினர். பின்னர், பாலகிருஷ்ணனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளிக்க முயன்றவரை உடன் காப்பாற்றிய போலீஸாரை, எஸ்பி பத்ரி நாராயணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x