Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்குரிய 50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

காரைக்கால்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துக் கல்லூரிகளில், மாநில அரசுக்குரிய 50 சதவீத இடங்களை பெறுவதற்கு புதுச்சேரி அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் எம்.அருள்முருகன் நேற்று காரைக்காலில் செய்தியா ளர்களிடம் கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், மாநில அரசுக்குரிய 50 சதவீத இடங்களை, ஒவ்வோர் ஆண்டும் முழுமையாக வழங்குவதில்லை. மாநில அரசும் இதனை வலியுறுத்திப் பெற முனைப்பு காட்டுவதில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை முழுமையாக மாநில அரசிடம் ஒப்படைத்தால், புதுச்சேரி மாநில மாணவர்கள் 450 பேர் பயன்பெற முடியும். மாநில அரசுக்குரிய இடங்களை பெற புதுச்சேரி அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளிலும், அண்டை மாநிலமான தமிழகத்திலும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் புதுச்சேரியில் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் வேதனையடைந் துள்ளனர். புதுச்சேரி அரசின் இத்தகையை செயல் கண்டிக் கத்தக்கது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x