Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த 18-ம் தேதி இரவு விடிய விடிய மழைபெய்தது. இதனால், இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே ஓடை பகுதியில் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் சுமார் ஒரு அடி அளவுக்கு மேலாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வழியாகச் சென்ற வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இப்பகுதியில் மழைநீர் வழிந்தோட நகராட்சி மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை அமைச்சர்கடம்பூர் செ.ராஜு பார்வையிட்டார். ஓடை பகுதியில் நீர் தேங்காமல் விரைவில் வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏசின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT