Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 16 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி புறவழிச்சாலையில் மீன்வளக் கல்லூரி அருகேயுள்ள தனியார் சரக்கு பெட்டக முனையத்துக்கு வந்த ஒரு சரக்கு பெட்டகத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சோதனை செய்ததில், ஆவணங்களில், `தேங்காய் ஏற்றுமதி’ என குறிப்பிடப்பட்டிருந்தது. பெட்டகத்துக்குள், தேங்காய்களுக்கு மத்தியில், 16 டன் எடையுள்ள, ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்தது யார், எந்த நாட்டுக்கு கடத்த முயன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT