Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் அதிமுகவினர் தனி கவனம் செலுத்த வேண்டும் தி.மலை மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் அதிமுகவினர் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தி.மலை மாவட்ட(தெற்கு) அதிமுக செயலாள ருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில், வாக்குச்சாவடி நிலை முகவர்களாக நியமிக்கப் பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.

18 வயது நிறைவு பெற்றவர் களின் பெயர்களையும், வாக்காளர்பட்டியலில் இடம் பெறாதவர்களையும், புதிதாக குடிவந்தவர்களையும் பட்டியலில் சேர்க்க வேண் டும். வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை, பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட முகாமில் சேர்த்திட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமில் அத்துமீறல்கள் நடைபெற்றால், தேர்தல் அதிகாரிடம் புகார் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x