Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
வாலாஜா: வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தமுமுக சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கையில் பாகுபாடு, மாணவிகளுக்கு உளவியல் ரீதியான சித்ரவதை, ஊழல் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியையின் நிர்வாக நடவடிக்கையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் ஷாநவாஸ் கான் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முஹம்மது ஹசன், மாவட்டச் செயலாளர் வாலாஜா மஸ்தான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT