Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 73 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,921 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,085 ஆகவும்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,129 ஆகவும் அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 18,410-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து, இதுவரை 17,948 பேர் குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர். 191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 271 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x