Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

‘அண்ணல் அம்பேத்கர் விருது' பெற திருவள்ளூர் மாவட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக அரிய தொண்டாற்றி வருவோரில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில், 2021-ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று, `அண்ணல் அம்பேத்கர் விருது’ பெற தகுதியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணைய தளத்திலிருந்து, விருதுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தங்களைப் பற்றிய விவரங்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை வரும் 25-ம் தேதிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சேர்ப்பிக்கவேண்டும் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x