Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்

வண்டலூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நந்திவரம் - கூடுவாஞ்சேரியில், மாவட்ட தலைவர் கே.ஷேக்தாவூத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை தலைவரும், நாடாளுமன்ற கொரடாவுமான கே. நவாஸ்கனி எம்.பி, மாநில செயலர் வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன்,மாநில துணை செயலர் அப்துல் காதர் ஷரீப் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

பொதுக்குழு கூட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்த திமுக அமைத்துள்ள கூட்டணியில் அங்கம் வகிப்பது என்றும் கூட்டணியின் தலைமையாக விளங்கும் மு.க.ஸ்டாலினின் தலைமையில் எதிர்வரும் தேர்தலை சந்தித்து வெற்றியை பெற்று, அவரை முதல்வராக பதவியேற்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பாடுபடும் என்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக பங்குபெறுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் எதிர்வரும் 2021 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டுக்கான வரவேற்பு குழுவில் பெருவாரியான எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்ப்பதென்றும், மாநில மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும் அளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டச் செயலர் வி. அஜ்மீர்காஜா, மாவட்ட துணை தலைவர் ஏ.சர்தார்பாஷா, மாவட்ட துணை தலைவர் ஜி. நூர்முகமது, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஏ.நாகூர்மீரான் உள்ளிட்ட பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x