Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

புதுச்சேரியில் புதிதாக 69 பேருக்கு கரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் நேற்று புதிதாக 69 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் 3,620 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 32, காரைக்காலில் 11, ஏனாமில் 2, மாஹேவில் 24 என மொத்தம் 69 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோ னாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,533 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 249 பேரும், வீடுகளில்421 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள் ளனர்.

மொத்தம் 670 பேர் சிகிச் சையில் உள்ளனர். நேற்று 102 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,254 (96.50 சதவீ தம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 307 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 504 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக 100-க்கும்கீழ் தொற்று பாதிப்பு உள்ளது. நமது சுகாதாரத்துறை கடந்த 7 மாதங்களாக பொதுமக்களுக்காக பணியாற்றி வருகிறது. பொதுமக் கள் மத்தியில் இருந்து ஒத்துழைப்பு இருந்தால் இன்னும் தொற்றை குறைக்க முடியும். ஆகவே 100 சதவீதம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில்

34 பேருக்கு கரோனா

கடலூர் மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிப்பு 23,947 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிப்பு 14,387ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x