Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
திண்டுக்கல் மாவட்ட கல்வித் துறை சார்பில் நத்தம்துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்வித் தன்னார்வலர்களுக்கு ‘கற்போம், எழுதுவோம்’ பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பள்ளியின் தலைமை யாசிரியர் திருநாவுகரசர் தலைமை வகித்தார். காசாம்பட்டி பள்ளி தலைமை யாசிரியர் ஜான்சகாயராஜ் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் நல்லுச்சாமி, வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் கிளாரா கிளமென்ஸ், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சியளித்தனர். நத்தம் வட்டாரத்தைச் சேர்ந்த 73 தன்னார்வலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர் பொன்னீஸ்வரி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT