Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்குச்சாவடி முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிப் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை. விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி, சாத்தூர், வில்லிபுத்தூர், அருப்புக்கோட்டையில் அரசு கலைக் கல்லூரி, சாத்தூர் தொகுதி கிராமங்களில் தாமிரபரணி தண்ணீர் கொண்டு வந்தது அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். திமுகவினர் எதுவுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT