Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

குண்டர் சட்டத்தில் முதியவர் கைது

ராமநாதபுரம்

சிக்கல் கிராமத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் மைதீன்(66). இவர் 19.9.2020 அன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் காதர் மைதீனை கைது செய்தனர். இந்நிலையில் இவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதியவர் காதர் மைதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கீழக்கரை மகளிர் போலீஸார் முதியவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x