Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

புதிய மாவட்டங்களுக்கு ஆட்சி அலுவலர் நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர்.

தருமபுரி

புதிய மாவட்டங்களுக்கு ஆட்சி அலுவலர் நியமிக்கக் கோரி, தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரேகா, மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் இளவேனில் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதியதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளகுறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த அலுவலகங்களுக்கு ஆட்சி அலுவலர் பணியிடம் மிகவும் அவசியம். விவசாயிகள் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல ஏதுவாக ஒரு மாவட்ட அலுவலகத்துக்கு ஒரு ஆட்சி அலுவலர் பணியிடத்தை உடனடியாக நிரப்பவேண்டும்.

அமைச்சுப் பணியாளர் மாறுதல்களில் சீரான நடை முறையைப் பின்பற்ற வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x