Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டம்

தருமபுரி

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரத்தில் வார்டு எண் 32, 33 உள்ளன. இங்கு குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர்.

இங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிரைஸாமேரி, நகர செயலாளர் ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயா, மணிகண்டன், ரங்கநாயகி, நிர்மலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் தொகைக்கு ஏற்ப ஒகேனக்கல் குடிநீர் வழங்காததால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இங்குள்ள சுடுகாட்டுச் சாலையை சீரமைத்து சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x