Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

புதுச்சேரியின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்ட பிறகு தேர்தல் நடத்த கோரிக்கை

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட போராட்டக் குழு அமைப்பாளர் எஸ்.பி.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் அரசு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த இயலவில்லை. அரசு கடன் பத்திரத்தை விற்று, ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கிறது. எனவே, புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால், அடுத்து வரக்கூடிய அரசும் இதே பிரச்சினையை சந்திக்கும். எனவே, இதற்கு தீர்வு கண்ட பிறகே சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x