Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம்

மன்னார்குடி அருகே அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன்(40), விவசாய தொழிலாளி. இவரது மனைவி லலிதா(35), மகன் ராகுல்(15). இவர்கள், அரசு சார்பில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் எதிர்பாராதவிதமாக ராமையன் வீட்டு கான்கிரீட் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் ராமையன், லலிதா, ராகுல் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x