Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

நவ.26-ல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 26-ம் தேதி காலை 11 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இதன் பொருட்டு பெயரை பதிவு செய்து “காணொலிக்காட்சி” மூலம் குறைகளை தெரிவித்து பயனடையலாம். கோரிக்கை மனுக்களை நவ.26-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அவை மாவட்டஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பிஅவர்களிடமிருந்து உரிய பதில் பெற்று விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x