Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

சிறுமிக்கு தொல்லை கொடுத்தவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தூத்துக்குடி: வைகுண்டம், புதுக்குடி கீழுர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (48). இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி சின்னத்துரையை கைது செய்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் சின்னத்துரையை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி, சிறையில் உள்ள சின்னத்துரையிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x