Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

தி.மலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோலியிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மாடவீதியில் சுவாமி வீதியுலா நடத்த வேண்டும். முன் பதிவு இல்லாமல் பக்தர்களை தரிசனம் செய்ய கோயில் உள்ளே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதுகுறித்து இந்து முன்னணியினர் கூறும்போது, “தி.மலையில் பல நூற்றாண்டு காலமாக தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. மழை வெள்ளம் என்று பாராமால் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாகக் கூறி, தீபத்திருவிழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோயில் உள்ளே, ஒரு நாளைக்கு முன் பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களால் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யாதவர்களையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், தடையை நீக்கி மாட வீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x