மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு நிவாரணம் வழங்க தொமுச வலியுறுத்தல்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு நிவாரணம் வழங்க தொமுச வலியுறுத்தல்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (26). திருப்பூர் மின் பகிர்மான வட்டம் கணபதிபாளையம் பகுதியிலுள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணபதிபாளையம் ராயல் அவென்யூ பகுதியிலுள்ள மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோளாறை சரி செய்யும் பணியில் விஜயன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்துசம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.தகவலின் பேரில் பல்லடம் போலீஸார் விரைந்து சென்று, விஜயனின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொமுச கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in