வேலூர்  ஜலகண்டேஸ்வரர் கோயில் சார்பில் தி.மலை தீப திருவிழாவுக்காக திருக்குடைகள் ஊர்வலம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்  வரர் கோயிலில் இருந்து தி.மலைக்கு திருக்குடைகள் ஊர்வலத்தை நேற்று தொடங்கி வைத்த மகாதேவமலை மகானந்த சித்தர். படம்: வி.எம்.மணிநாதன்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயிலில் இருந்து தி.மலைக்கு திருக்குடைகள் ஊர்வலத்தை நேற்று தொடங்கி வைத்த மகாதேவமலை மகானந்த சித்தர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக வேலூர்  ஜலகண்டேஸ்வரர் கோயில் சார்பில் திருக்குடைகள் ஊர்வலம் நேற்று தொடங்கியது.

வேலூர் கோட்டையில் உள்ள  ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து ஆண்டுதோறும் தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருக்குடை ஊர்வலம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் மீண்டும் திருக்குடை ஊர்வலம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 29-ம் தேதி தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா வுக்காக, அண்ணாமலையார் திருக் குடை சமிதி மற்றும் வேலூர்  ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் சார்பில் திருக்குடை ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற்றது. திருக்குடை ஊர்வலத்தை காட்பாடி அடுத்த மகாதேவமலை மகானந்த சித்தர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில்,திருக்குடை சமிதி பிரத்தியங்கரா தாசன், கோயில் செயலாளர் சுரேஷ்மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து தி.மலைக்கு மேள தாளங்கள் முழங்க 3 திருக்குடைகள் ஊர்வலமாக நேற்று புறப்பட்டன. இந்த திருக்குடைகள் தி.மலை அண்ணாமலையார் கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

வேலூரில் இருந்து தி.மலைக்கு ஊர்வலமாக செல்லும் திருக்குடைகளுக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் சிறப் பான வரவேற்பு அளித்து தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in