பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூர் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் பி.சங்கர் (43). இவர், தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, அரூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க நகை, மடிக்கணினி, அலைபேசி, ரொக்கம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in