உளுந்தூர்பேட்டையில் 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் போலீஸார், கிராமப்புறங்களில் நேற்று அதிகாலை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையின் சந்திப்பு அருகே ஒரு பெட்டிக் கடை, உளுந்தூர்பேட்டை- திருச்சி நெடுஞ்சாலை காவலர் குடியிருப்பு எதிரே உள்ள கடை என இரு கடைகளில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதை விற்பனை செய்ததாக உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மனோகரன் (38), குமார் (51) ஆகிய இருவரை போதை பொருள் விற்பனை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று திருநாவலூர் காவல் நிலையத்தில் 9 வழக்குகள், எடைக்கல் காவல் நிலையத்தில் 3 வழக்குகள், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் 10 வழக்குகள் என மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in