கடலில் குளித்த கல்லூரி மாணவர் மாயம்

கடலில் குளித்த கல்லூரி மாணவர் மாயம்
Updated on
1 min read

மரக்காணம் அருகே கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மாயமானார்.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ஹரீஷ் (20). மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

இவர் நேற்று தனது நண்பர்களுடன் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் சரகத்திற்குட்பட்ட தந்திராயன்குப்பம் பகுதி கடலில் குளிக்க சென்றனர். கடலில்இறங்கியவர்களில் ஹரீஷ் மாயமாகியுள்ளார்.

இதையடுத்து சக நண்பர்கள் கோட்டக் குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in