போனஸ் வழங்காததைக் கண்டித்து வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம் முன் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம்

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம் முன்பு நடைபெற்ற கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்.
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனம் முன்பு நடைபெற்ற கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்.
Updated on
1 min read

தீபாவளிக்கு போனஸ் வழங்கா ததைக் கண்டித்து வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வாழங்காததைக் கண்டித்து தீபாவளியன்று தொழி லாளர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், நிறுவனம் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும், கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டமும் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்க (சிஐடியூ) தலைவர் கே.பச்சமால் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் குமர வடிவேல், முன்னாள் செயலாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியூ மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி பேசினார். நிர்வாகிகள் தனிராம்,பெருமாள், காட்டுராஜா மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனார். வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன நிர்வாகம் 20 சதவீத போனஸ் வழங்கும் வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும், வரும் 19-ம் அரசு உப்பு நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in