ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கிய கோயில் தலைமை குருக்கள் மோகன் சாமி.
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கிய கோயில் தலைமை குருக்கள் மோகன் சாமி.

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் புத்தாடை வழங்கும் விழா

Published on

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் ஐயப்பன் ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளியையொட்டி புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. வல்லபை ஐயப்பா சேவை நிலையம் அறக்கட்டளை சார்பில், ரெகுநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு ரெகுநாதபுரம் ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் ரட்சகன் முன்னிலை வகித்தார். வல்லபை அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எஸ். மோகன் சாமி தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்.

விழாவில் ஊராட்சி செயலர் உதயகுமார் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், வல்லபை அறக்கட்டளை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in