சிவகங்கை, ராமநாதபுரம் புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்பு

சிவகங்கை, ராமநாதபுரம் புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பி.மதுசூதன் ரெட்டி நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ.ஜெயகாந்தன் மீன்வளத் துறை இயக்குநராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக பி.மதுசூதன் ரெட்டி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பி.மதுசூதன்ரெட்டி நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பொறுப் பேற்றார். அவரிடம் முன்னாள் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் பொறுப்புகளை ஒப்படைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், கோட்டாட்சியர்கள் முத்துகழுவன், சுரேந்திரன் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்டத்தின் 23-வது ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், "பின்தங்கிய மாவட்டம் எனக் கூறப்படும் ராமநாதபுரத்தில் தொழில் வளர்ச்சிகள் குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மருத்துவக் கல்லூரி பணி விரைவுபடுத்தப்படும். மாவட்டத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல எனது முழு உழைப்பையும் பயன்படுத்துவேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in