வாலிநோக்கம் கடலில் மூழ்கி   இளைஞர் மரணம்

வாலிநோக்கம் கடலில் மூழ்கி இளைஞர் மரணம்

Published on

காரைக்குடி முத்தூருணியைச் சேர்ந்தவர் குமார். இவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஷ்வா(20). இவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரைக்கு நேற்று குளிக்கச் சென்றார். அங்கு நண்பர்களுடன் குளித்தபோது கடல்அலையில் விஷ்வா இழுத்துச் செல்லப்பட்டார். அவரை நண்பர்கள் மீட்டு வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே விஷ்வா உயிரிழந்தார். வாலிநோக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in