சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் உள்பட 3 பேர் கைது

சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் உள்பட 3 பேர் கைது
Updated on
1 min read

விழுப்புரம் அருகே சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய இளைஞர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16வயது சிறுமி அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். அவரை பள்ளியந்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணசாமி மகன் முகேஷ் (21) என்பவர் காதலிப்பதாக கூறி கடந்த 10-ம் தேதி சிறுமிக்கு கட்டாய தாலி கட்டினார். இதையடுத்து அச்சிறுமி தன்னை முகேஷின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த முகேஷ், தனக்கு தெரிந்தவர்களான அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (51), அவரது மனைவி கோமதி (40) ஆகியோரிடம் சொல்லி சிறுமியை அவர்களது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அப்போது சிறுமிக்கு சூடு வைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து அச்சிறுமி அவசர போலீஸ் உதவியுடன் தப்பி, காணை போலீஸில் புகார் அளித்தார். பின்னர் அவர் சிகிச் சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்புகாரின் பேரில் முகேஷ் உட்பட 3 பேரை யும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in