செங்கம் அருகே கார் மீது லாரி மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

செங்கம் அருகே கார் மீது லாரி மோதியதில்  சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
Updated on
1 min read

செங்கம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நிஷாந்த்(37). இவர், தனது மனைவி சுகன்யா(35) மற்றும்மகள்கள் கிறிஸ்டி(5), தேவதர் ஷிணி (2) ஆகியோருடன், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு நேற்று முன் தினம் இரவு காரில் புறப்பட்டார். இவருடன், அவரது நண்பர் குமாரும்(34) என்பவரும் உடன் வந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தில் நேற்று அதிகாலை வந்தபோது, கார் மீது எதிர் திசையில் வந்த சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி முழுமையாக சேதமடைந் தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த நிஷாந்த், குமார் மற்றும் 2 வயது சிறுமி தேவதர்ஷிணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாச்சல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கிய சுகன்யா மற்றும் கிறிஸ்டியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாச்சல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெங்களூரு - புதுச்சேரி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in