காரில் சென்றவர்களை வழிமறித்து கொலை மிரட்டல்

காரில் சென்றவர்களை வழிமறித்து கொலை மிரட்டல்
Updated on
1 min read

திருநெல்வேலி, குலவணிகர் புரத்தைச் சேர்ந்தவர் இம்மானுவேல் பிரசாத் (38). இவர், தென்காசியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

வல்லம் பிஸ்மி நகரில் ராஜீவ் என்பவருக்கு ஒப்பந்தத்தில் வீடு கட்டியதில் பணப் பிரச்சினை காரணமாக பணியை முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வல்லத்தில் வேறொருவருக்கு வீடு கட்டியதற் கான பணத்தை வாங்குவ தற்காக இம்மானுவேல் பிரசாத், அவரது நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜேக்கப், காசிப்பாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் சென்ற காரை ராஜீவ் மற்றும் அவரது தம்பி ராமு ஆகியோர் சேர்ந்து வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in