Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில்181 பேருக்கு தேசிய அடையாள அட்டை

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறும் சிறப்பு முகாம், துறையின் மாவட்ட அலுவலர் சுப்ரமணி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், மருத்துவர்கள் சதீஷ்ராஜ், சுதா, சீனிவாசன், அகல்யா ஆகியோர்பங்கேற்றனர். முகாமில் மாற்றுத் திறனாளிகள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களில், தேசிய அடையாள அட்டைக்கான கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, மாற்றுத்திறன் பாதிப்பை மதிப்பீடு செய்து, சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் 181 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இச்சிறப்பு முகாமில் மொத்தம் 345 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்தனர். நிகழ்ச்சியில், திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி, தனி வட்டாட்சியர் கவிதா, பேச்சுப் பயிற்சியாளர் பிரபாகரன், செயல் திறன் உதவியாளர் ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x