அஞ்சல் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

அஞ்சல் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நாளை (13-ம் தேதி) வரை தங்கப் பத்திரம் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நாளை (13-ம் தேதி) வரை தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செய்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருவர் ஒரு கிராம் முதல் நான்காயிரம் கிராம் வரை வாங்கலாம்.

தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு 6 மாதத்துக்கும் முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இத்திட்டத்தில் சேர ஆதார் எண், பான் எண், வங்கிக் கணக்கு ஆகியவை அவசியம். தங்கப் பத்திரங்களை வைத்து தேவைப்படும் போது வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கப் பத்திரம் திட்டத்தில் சேர்ந்த பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in