Published : 11 Nov 2020 03:18 AM
Last Updated : 11 Nov 2020 03:18 AM

எச்.ராஜா மீது மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் புகார்

அரியலூர் காவல் நிலையத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவித்துள்ளது:

பாஜகவின் வேல் யாத்திரையை தமிழக அரசு தடை விதித்தது குறித்து எச்.ராஜா காஞ்சிபுரத்தில் பேசும்போது, “தமிழக அரசு நொண்டி சாக்கு கூறி, வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது” என்றார். மேலும் இதுகுறித்து ட்விட்டரிலும் பதிவு செய்துள்ளார். இது மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. எனவே, எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x