திருப்பத்தூர் அருகே கோயில் வாசலில் ஐம்பொன் சிலை

கோயில் வாசலில் வீசப்பட்ட ஐம்பொன்னாலான  தேவி அம்மன் சிலை.
கோயில் வாசலில் வீசப்பட்ட ஐம்பொன்னாலான  தேவி அம்மன் சிலை.
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே பெருமாள் கோயில் வாசலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட தேவி அம்மன் சிலையை வீசிச்சென்ற மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஆதியூர் கிராமத்தில்  லட்சுமி நாராயண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் வாசலில் நேற்று காலை பெரியகோணிப்பை ஒன்று கிடந்தது. இதை, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு திடுக் கிட்டனர்.

உடனடியாக திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத் தனர். அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் கோயில் வாசலில் வீசப்பட்டிருந்த கோணிப் பையை திறந்து பார்த்தபோது, அதில் ஐம்பொன்னால் செய்யப் பட்ட  தேவி அம்மன் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது.

அந்த சிலையை மீட்ட காவல் துறையினர் அதனை இந்து சமய அறநிலையத்துறையினரிடம் நேற்று ஒப்படைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து கோயில் வாசலில் சிலையை வீசிச்சென்றவர்கள் யார்? தமிழகத்தில் சமீபத்தில் கோயில்களில் சுவாமி சிலைகள் ஏதாவது திருட்டு போயுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in