Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

கோடநாடு வழக்கில் ஆய்வாளர் சாட்சியம்

உதகை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. விசாரணைக்கு சதீசன் மற்றும் ஜம்சீர் அலி ஆஜராகவில்லை. மற்ற 8 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் பாலசுந்தரம் நேற்று சாட்சியம் அளித்தார். இவர் தற்போது காரமடை ஆய்வாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி பி.வடமலை, வழக்கை நாளை (நவ.11) ஒத்தி வைத்து உத்தரவிட்டார். சயான், மனோஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற அனைவரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x