கோடநாடு வழக்கில் ஆய்வாளர் சாட்சியம்

கோடநாடு வழக்கில் ஆய்வாளர் சாட்சியம்
Updated on
1 min read

இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. விசாரணைக்கு சதீசன் மற்றும் ஜம்சீர் அலி ஆஜராகவில்லை. மற்ற 8 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் பாலசுந்தரம் நேற்று சாட்சியம் அளித்தார். இவர் தற்போது காரமடை ஆய்வாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி பி.வடமலை, வழக்கை நாளை (நவ.11) ஒத்தி வைத்து உத்தரவிட்டார். சயான், மனோஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற அனைவரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in