Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM

விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீடு செய்தோருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஓரிவயல் விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஓரிவயல், பனைக்குளம் கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து ஓரிவயல் ஊராட்சித் தலைவர் டி.மலர்மதி, ஓரிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்லம் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x