விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Updated on
1 min read

தேனி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் சுருளி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அகில பாரத அனுமன் சேனா இயக்கத்தின் பொறுப்பாளர் ஸ்ரீதர் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். இது சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in