Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM

திண்டுக்கல் அருகே கரோனா பாதிப்பால் பிசியோதெரபி நிபுணர் தற்கொலை

கரோனா பாதிப்பு காரணமாக மனமுடைந்த பிசியோதெரபி நிபுணர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி நிபுணராக பணிபுரிந்தவர் சின்னுச்சாமி (44). இவர் கரோனா தொற்று காரணமாக விடுமுறை எடுத்துக் கொண்டு, தனது மனைவியின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள மல்லையாபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். செல்லும் வழியில் திண்டுக்கல் செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே தனக்கு கரோனா தொற்று உள்ளதாகவும், மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்று காலையில் அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இவரது இருசக்கர வாகனம், கடிதம் ஆகியவற்றைக் கைப்பற்றிய திண்டுக்கல் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x