திண்டுக்கல் அருகே கரோனா பாதிப்பால் பிசியோதெரபிஸ்ட் தற்கொலை

திண்டுக்கல் அருகே கரோனா பாதிப்பால் பிசியோதெரபிஸ்ட் தற்கொலை
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணிபுரிந்தவர் சின்னுச்சாமி (44). இவர் கரோனா தொற்று காரணமாக விடுமுறை எடுத்துக் கொண்டு, தனது மனைவியின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள மல்லையாபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். வழியில் திண்டுக்கல் செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே தனக்கு கரோனா தொற்று உள்ளதாகவும், மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in